×

மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 1,403 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

 

ஈரோடு, மார்ச் 20: ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 1,403 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதில், முதற்கட்டமாக மாவட்டத்தில் உரிமம் பெற்று தற்காப்பிற்காக வைத்துள்ள ஒற்றை குழல், இரட்டை குழல் துப்பாக்கிகள், ரைபிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளர்கள் உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில், மாவட்டத்தில் 1,403 துப்பாக்கிகள் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 1,442 துப்பாக்கிகள் உரிமம் பெறப்பட்டுள்ளது. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 39 துப்பாக்கிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறை உள்ள காலத்திலும் வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள துப்பாக்கிகளை தேர்தல் பாதுகாப்பு கருதி உரிமைதாரர்களிடம் இருந்து 1,403 துப்பாக்கிகளும் பெறப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பெறப்பட்டதற்கான ரசீதும் உடனுக்குடன் உரிமைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 1,403 துப்பாக்கிகள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்